Wednesday, May 2, 2012

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 26 ஆவது வருட நிணைவு தினம்


(03-05-2012)
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 26 ஆவது வருட நிணைவு தினம் கடந்த சித்திரை 29 முதல் வைகாசி 06 ஆம் திகதி வரை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.






தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 26 ஆவது வருட நிணைவு தினம் கடந்த சித்திரை 29 முதல் வைகாசி 06 ஆம் திகதி வரை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ வின் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் நினைவு தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றது.

குறித்த சுவரொட்டியில் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் போராளிகள் ,ஆதரவாளர்கள் ஆகியோருக்கு மீண்டும் எம் அஞ்சலிகள் என குறிப்பிடப்பட்டள்ளது.

எதிர்வரும் 06 ஆம் திகதி நினைவு தின திகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம் பெற உள்ளதாக ரெலோ வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment